செய்திகள்
அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரண உதவி- தமிழக அரசு உத்தரவு
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
அனைத்துவித கோவில் பணியாளர்களுக்கும் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் 10448 பேர் இதன் மூலம் பலனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்துவித கோவில் பணியாளர்களுக்கும் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் 10448 பேர் இதன் மூலம் பலனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.