செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை 16-ந்தேதி தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published On 2020-05-12 07:05 GMT   |   Update On 2020-05-12 07:05 GMT
வருகிற 16-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னயாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். குமரி கடல், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 105 டிகிரி வரை பதிவாகக் கூடும். அதனால் இன்று விவசாயிகள், பொதுமக்கள் காலை 11.30 மணி முதல், பிறபகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரியாக இருக்கும். அந்தமான் நிக்கோபார் பகுதியில் வரும் 16-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நாளை 13-ந் தேதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News