செய்திகள்
டி.டி.வி. தினகரன்

அரசியல் உள்நோக்கத்தால் காவல்துறை அத்துமீறுகிறது- டி.டி.வி. தினகரன் கண்டனம்

Published On 2020-05-11 05:55 GMT   |   Update On 2020-05-11 05:55 GMT
அரசியல் உள்நோக்கத்தால் காவல்துறை அத்துமீறுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத் துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொதுவெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலைத் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கட்சியின் தகவல் தொழிற்நுட்பப்பிரிவு (ஆண்கள்) செயலாளர் முத்துக்குமார் காவல்துறையினர் அதிகாலையில் திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பகிர்ந்த ஒரு பதிவுக்காக முத்துக்குமாரைக் கைது செய்திருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் சிந்தனையோடும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

முத்துக்குமாரை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர் மீதான பொய் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News