செய்திகள்
கமல்ஹாசன்

டாஸ்மாக் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு - கமல்ஹாசன் கண்டனம்

Published On 2020-05-09 21:33 GMT   |   Update On 2020-05-09 21:33 GMT
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மேல் முறையீட்டுக்கு  எதிராக வழக்கு தொடர போவதாக அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின்  தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News