செய்திகள்
ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவு- ராதாகிருஷ்ணன்

Published On 2020-05-07 06:46 GMT   |   Update On 2020-05-07 06:46 GMT
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவாக உள்ளது என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவாக உள்ளது.

சென்னையில் 7 மண்டலங்களில் மட்டும் தான் பாதிப்பு அதிகம் உள்ளது. அதனால் சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவமைனையில் சிகிச்சை பெறுவோரை பார்க்க உறவினர்கள் செல்ல வேண்டாம். சளி, காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு மக்கள் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News