செய்திகள்
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைககளை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.