செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை- ஐகோர்ட்

Published On 2020-05-05 06:26 GMT   |   Update On 2020-05-05 06:50 GMT
தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தனர். மின்கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதுதொடர்பாக மே 18-ம் தேதிக்குள் தமிழக அரசு, டான்ஜெட்கோ பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News