செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பூரண மதுவிலக்கு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2020-05-04 08:09 GMT   |   Update On 2020-05-04 08:09 GMT
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்.தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினர். மேலும் பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவித்தனர்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
Tags:    

Similar News