செய்திகள்
கைது

மொம்மிடி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

Published On 2020-05-02 09:59 GMT   |   Update On 2020-05-02 09:59 GMT
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொப்பக்கரையில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக மல்லிகா அர்ஜுனன் என்பவரை கைது செய்தனர். பின்னர் கைதான அவரிடம் இருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News