செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தோருக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும்-முதல்வர் பழனிசாமி

Published On 2020-04-24 15:12 GMT   |   Update On 2020-04-24 15:12 GMT
டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

மேலும் நீரழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

ரமலான் நோன்பு தொடங்க உள்ளதால் அதற்கான உணவு வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
Tags:    

Similar News