செய்திகள்
கைது

காரமடை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2020-04-24 13:52 GMT   |   Update On 2020-04-24 13:58 GMT
காரமடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.

கோவை:

கோவையை அடுத்த காரமடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது குருந்தமலை மொக்கை நகர் அருகே சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். 

இதைகண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பஜனை கோவில் ரோட்டை சேர்ந்த கார்த்தி (வயது 26) மற்றும் சதீஷ் (29 ) என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600 பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News