செய்திகள்
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த குடியரசு துணைத் தலைவர்

Published On 2020-04-22 07:31 GMT   |   Update On 2020-04-22 08:03 GMT
கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது, தமிழகத்தில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News