செய்திகள்
கைது

பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

Published On 2020-04-22 07:15 GMT   |   Update On 2020-04-22 07:15 GMT
பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே ராஜகிரி பகுதியில் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜகிரி சந்தையின் பின்புறம் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகிரி வடக்குத் தெரு சாகுல்ஹமீது(வயது18) அதே தெரு முகமதுஆசிப்(17), திருப்பாலத்துறை ஜமீல் அகமது(19) என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News