செய்திகள்
தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-04-21 07:18 GMT   |   Update On 2020-04-21 07:18 GMT
கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள பீ.கே வீதியைச் சேர்ந்தவர் யூசுப். இவரது மகள் நஸ்ரின் (வயது 20).

இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த இவர் தனது அறையில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட நஸ்ரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள எல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பிரபு (வயது29). தனியார் நிறுவன ஊழியர். கடந்த வாரம் இவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்தார்.

இதில் வேதனை அடைந்த அவரது மனைவி கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தினேஷ் பிரபு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷ் பிரபுவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News