செய்திகள்
நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து - சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு
நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட் மற்றும் தமிழகம், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் கீழமை நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்படுகிறது என சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1-ம் தேதி 31-ம் தேதி வரை விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.
மே 2 முதல் 31-ம் தேதி வரை வழக்கம்போல் நீதிமன்றம் செயல்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.