செய்திகள்
ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்
கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:-
கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை.
விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. சிகிச்சை, மரணம், திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும்
முக கவசம், கையுறை அணிந்து செய்தித்தாளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் இரவில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:-
கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை.
விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. சிகிச்சை, மரணம், திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும்
முக கவசம், கையுறை அணிந்து செய்தித்தாளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் இரவில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.