செய்திகள்
முக ஸ்டாலின்

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா? உரிய முடிவை உடனே அறிவிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2020-04-11 04:58 GMT   |   Update On 2020-04-11 04:58 GMT
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த உரிய முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அரசு அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள்.

அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கோல்டன் பீரியட்தான், அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். தனித்திருத்தல் மட்டுமே மக்களால் செய்ய முடிந்தது, மற்ற அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள், ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்வதற்கு திமுக தயாராக உள்ளது.

எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. எம்எல்ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News