செய்திகள்
கைது

மதுரை வண்டியூரில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

Published On 2020-04-09 13:48 GMT   |   Update On 2020-04-09 13:48 GMT
மதுரை வண்டியூரில் தூக்கத்தை கலைத்ததால் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை:

மதுரை வண்டியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் கட்டிட தொழிலாளி. இவரது சொந்த ஊர் கீழ ராங்கியம்.  இவரது மனைவி ராக்கு. மகன்கள் அருண்குமார், வீரமணி. வீரமணி துபாயில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் குமாருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்துக்குமார் நேற்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அருண்குமார் தனது தாய் ராக்குவுடன் வாக்கு வாதம் செய்தார். இதனால் முத்துக்குமாருக்கு தூக்கம் கலைந்தது. எரிச்சல் அடைந்த முத்துக்குமார் மகனை எச்சரித்தார். ஆனாலும் அருண்குமார் கேட்கவில்லை. இதனால்  ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், மண்வெட்டியால் அருண்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து முத்துக்குமார் அண்ணா நகர் போலீசில் சரணடைந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று அருண்குமார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News