செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு

Published On 2020-04-07 12:43 GMT   |   Update On 2020-04-07 12:47 GMT
தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 621 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் ஒருவர் பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆனது. கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்ற 19 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News