செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையம் அருகே 7-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-04-05 10:46 GMT   |   Update On 2020-04-05 10:46 GMT
மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் பூவிகா(வயது13). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.


தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து வந்தார்.


இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த பூவிகா திடீரென சாணிபவுடரை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News