செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை

Published On 2020-04-03 13:45 GMT   |   Update On 2020-04-03 13:45 GMT
தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 411 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு?

திண்டுக்கல் 43, நெல்லை 36, ஈரோடு 32, கோவை 29, தேனி 21 , நாமக்கல் 21, கரூர் 20, செங்கல்பட்டு 18, மதுரை 15, விழுப்புரம் 13, திருவாரூரில் 12 பேர், விருதுநகர் 11, திருப்பத்தூர் 10 தூத்துக்குடி 9, சேலத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகையில் தலா 5 , காஞ்சிபுரத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி. மலை, ராமநாதபுரத்தில் தலா 2, திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News