செய்திகள்
வெளிமாநில தொழிலாளர்கள் முகாமில் முதல்வர் ஆய்வு
சென்னை ஆர்.ஏ.புரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூடத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
சென்னை:
சென்னை ஆர்.ஏ.புரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூடத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அப்போது முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் வேளச்சேரி மற்றும் பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நல கூடங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூடத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அப்போது முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் வேளச்சேரி மற்றும் பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நல கூடங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.