செய்திகள்
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த தர்மபுரியை சேர்ந்த 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அரூர் மற்றும் பாலக்கோட்டை சேர்ந்த 20 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களின் ரத்தம் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தர்மபுரி:
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அரூர் மற்றும் பாலக்கோட்டை சேர்ந்த 20 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து வந்து தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் தான் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரியவரும். என்றாலும் அவர்கள் தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.