செய்திகள்
கொரோனா

மதுரை மகபூப்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா அறிகுறி

Published On 2020-04-02 14:55 GMT   |   Update On 2020-04-02 14:55 GMT
மதுரை மகபூப்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அவர்கள் 6 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை:

மதுரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயது நபர் உயிரிழந்தார். அவர் தொடர்புடைய 180 பேரை கண்டறிந்து அவர்களை சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரானாவால் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மதுரையை சேர்ந்த 9 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதியானதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மகபூப்பாளையத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற மகபூப்பாளையம் அன்சாரி நகரைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News