செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு

Published On 2020-04-02 12:49 GMT   |   Update On 2020-04-02 12:49 GMT
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.

தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.
 
இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News