செய்திகள்
தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பான விஷயத்தில், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அது தேவையில்லாதது என கே.பி.ராமலிங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.