செய்திகள்
அதிகாரிகள் ஆய்வு (கோப்புப்படம்)

குடிமங்கலம் பகுதியில் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு

Published On 2020-03-30 14:18 GMT   |   Update On 2020-03-30 14:18 GMT
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சிகளில் தூய்மை பணிகள் தொடர்ந்து நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள, 23 ஊராட்சிகளிலும் கிருமி நாசினிகள் தெளிப்பது தொடர்ந்து நடக்கிறது.

ஒன்றிய அலுவலகத்தில் அவசர தேவையில்லாமல் வெளிநபர்கள் உள்ளே நுழையக் கூடாதென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, அவசர மற்றும் அத்யாவசிய தேவைகள் இல்லாமல், பொதுமக்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என, அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பின்பற்றும் வகையில், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்லும் பொது மக்களை, ஊராட்சி நிர்வாகங்களின் சார்பில் கண்டித்து, விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News