செய்திகள்
கைது

கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 195 பேர் கைது

Published On 2020-03-30 10:52 GMT   |   Update On 2020-03-30 10:52 GMT
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை:

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News