செய்திகள்
மு.க.ஸ்டாலின்

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி

Published On 2020-03-30 05:26 GMT   |   Update On 2020-03-30 06:34 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு ஆன்லைன் மூலம் நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News