செய்திகள்
கைது

கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது

Published On 2020-03-29 11:58 GMT   |   Update On 2020-03-29 11:58 GMT
கபிஸ்தலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற ஒருவரை கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
                     
பாபநாசம் டி.எஸ்.பி. நந்தகோபால் மேற்பார்வையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், மற்றும் போலீசார் கபிஸ்தலம்காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்பொழுது கபிஸ்தலம் காமராஜர் நகர் பகுதியில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது காமராஜர் நகர் காவிரி ஆற்றுப் பகுதியில் துரைராஜ் மகன் மனோகரன் வயது 32 என்பவர் 92 மதுபாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இதேபோல் கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் சந்திரன் மகன் ராஜதுரை  வயது 31 இவர் ஈச்சங்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பதிவு செய்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News