செய்திகள்
தற்கொலை

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2020-03-29 11:50 GMT   |   Update On 2020-03-29 11:50 GMT
கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் ரயிலடி நாடார் தெருவில் வசிப்பவர் சோனையன் (வயது 75). விவசாயி இவருக்கு நீண்ட நாளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. 

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே வந்த இவர் காணவில்லை. பல இடங்களில் தேடிய போது இவர் கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் கொள்ளிடக் கரையில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்த இவரை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து இருந்த இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இவரது மகன் லட்சுமணன் (52) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News