செய்திகள்
கைது

அரசு தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2020-03-28 05:44 GMT   |   Update On 2020-03-28 06:10 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு விதித்த தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி. (வயது 50). இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் காய்கறி கடை வைத்து உள்ளார். இவர் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொதுமக்களின் நலத்துக்கு அச்சுறுத்தும் முறையில் கூட்டத்தை கூட்டி காய்கறி விற்பனை செய்தார்.

சப்-கலெக்டர் அனு உத்தரவின் பேரில் தி.மு.க. பிரமுகர் ராஜ சக்தி கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News