செய்திகள்
கோப்பு படம்

நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் - எம்ஆர் விஜயபாஸ்கர்

Published On 2020-03-23 12:58 GMT   |   Update On 2020-03-23 12:58 GMT
தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் மார்ச் 31-ம்  தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள் அதிகளவு கோயம்பேட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை மாநகர பேருந்துகள் கூடுதல் தூரமாக விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை இயக்கப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட வேண்டும். ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதாலும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கப்படுவதாக கூறினார்.

நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News