செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
மணவாளக்குறிச்சி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை குளச்சல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
மணவாளக்குறிச்சியை அடுத்த சேரமங்கலம், புதுவயல் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 50). தொழிலாளி.
ஹரிதாஸ் வீடு அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். 8-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது ஹரிதாஸ், மாணவி வீட்டுக்கு சென்றார். அவர் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் ஹரிதாஸ், அங்கிருந்து தப்பியோடினார்.
பெற்றோர் வீடு திரும்பியதும் இது பற்றி மாணவி, அழுதுக்கொண்டே தெரிவித்தார். அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி ஹரிதாசை பிடித்தனர். அவர் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணவாளக்குறிச்சியை அடுத்த சேரமங்கலம், புதுவயல் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 50). தொழிலாளி.
ஹரிதாஸ் வீடு அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். 8-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது ஹரிதாஸ், மாணவி வீட்டுக்கு சென்றார். அவர் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் ஹரிதாஸ், அங்கிருந்து தப்பியோடினார்.
பெற்றோர் வீடு திரும்பியதும் இது பற்றி மாணவி, அழுதுக்கொண்டே தெரிவித்தார். அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி ஹரிதாசை பிடித்தனர். அவர் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.