திண்டுக்கல்லில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை?
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இன்று காலை ரெயிலில் அடிபட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் முள்ளிப்பாடி ஆத்துமரத்துப்பட்டி என்ற இடத்தைச் சேர்ந்த திருப்பதி (வயது 47) என்பது தெரிய வந்தது. இவர் கேரளாவில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.