செய்திகள்
கைது

பென்னாகரம் அருகே பெண் பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2020-03-19 16:38 GMT   |   Update On 2020-03-19 16:38 GMT
பென்னாகரம் அருகே ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.







தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தொண்ணகுட்டஹள்ளி பாய்பள்ளத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு 18 வயதில் மகள் உள்ளார். இவரும் தர்மபுரி அடுத்த வேப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் முருகேசன் (வயது 23) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

அப்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி முருகேசன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தப் பெண் 6 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் முருகேசனிடம் கேட்ட பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 எனவே அந்தப் பெண் அவரது தந்தை கண்ணனுடன் சென்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து செய்தனர்.
Tags:    

Similar News