செய்திகள்
மளிகை, பால், காய்கறி கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும்: மாநகராட்சி
சென்னையில் மளிகை, பால், காய்கறி கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் மளிகை, பால், காய்கறி கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை. இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
மளிகை , பால், காய்கறி கடைகள் மூடப்படும் என தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.