செய்திகள்
பள்ளிக் கல்வித்துறை வளாகம்

தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை நிறுத்தி வைப்பு

Published On 2020-03-14 07:02 GMT   |   Update On 2020-03-14 07:02 GMT
கொரோனா அச்சம் காரணமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள கேரளாவை ஒட்டியுள்ள குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

சுகாதாரத் துறையுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட வேண்டியிருப்பதால் விடுமுறை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News