செய்திகள்
தமிழக சட்டசபை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி

Published On 2020-03-13 10:43 GMT   |   Update On 2020-03-13 10:54 GMT
தமிழக சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் - என தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும்.  இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ரூ. 15.42 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News