செய்திகள்
கோப்புப்படம்

ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-03-12 10:19 GMT   |   Update On 2020-03-12 10:19 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு வடக்கே உள்ள திருநள்ளாறு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது50). விவசாய கூலித் தொழிலாளி.

இவர் நேற்று அப்பகுதியில் உள்ள முருகையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாநாடு போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News