செய்திகள்
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நின்றது
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நின்றது.
கூடலூர்:
தமிழகம் மற்றும் கேரள பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் நீர் மட்டம் உயர்வதற்கான அளவில் இல்லை.
நேற்று வரை முல்லைப் பெரியாறு அணைக்கு 100 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் வரத்து முற்றிலும் நின்றது. அணையின் நீர் மட்டம் 115.55 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 48.08 அடியாக குறைந்துள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 38.65 அடியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.44 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரள பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் நீர் மட்டம் உயர்வதற்கான அளவில் இல்லை.
நேற்று வரை முல்லைப் பெரியாறு அணைக்கு 100 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் வரத்து முற்றிலும் நின்றது. அணையின் நீர் மட்டம் 115.55 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 48.08 அடியாக குறைந்துள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 38.65 அடியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.44 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.