செய்திகள்
ரஜினிகாந்தின் அரசியல் முடிவுக்கு நாம் தமிழர் கட்சி வரவேற்பு
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் முடிவை நாம் தமிழர் கட்சி வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என அடிக்கடி கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, அரசியல் மாற்றத்தை கொண்டு வர 3 திட்டங்களை தெரிவித்தார்.
54 ஆண்டு ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு மக்கள், இளைஞர்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் பணபலம், அரசியல் பலத்துக்கு எதிராக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த முடிவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
இவ்வாறு சீமான் கூறியிருக்கிறார்.