செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

ஆலங்குளம் அருகே இன்று மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-03-11 09:29 GMT   |   Update On 2020-03-11 09:29 GMT
ஆலங்குளம் அருகே இன்று காலை தென்னை மரத்தில் இளநீர் பறித்த போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடையம்:

ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் வேதம்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனி செல்வக்குமார்(வயது 32). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சீனி செல்வக்குமார் கடந்த 15 வருடங்களாக தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். தினமும் அவர் அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு சென்று இளநீர் பறித்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்தை சேர்ந்த ஒரு இளநீர் வியாபாரிக்கு இளநீர் பறிப்பதற்காக வட்டாலூர் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சீனி செல்வக்குமார் சென்றார். அவர் இளநீர் பறித்துவிட்டு மரத்தில் இருந்து இறங்கியபோது, அந்த மரத்தின் ஓலை அருகில் சென்ற உயர் மின்னழுத்த மின்சார கம்பியில் உரசியது. இதனால் அதன் வழியாக செல்வகுமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இளநீர் பறிக்க சென்ற தனது கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அறிந்த அவரது மனைவி , சீனி செல்வக்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.
Tags:    

Similar News