செய்திகள்
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒர்க்ஷாப் ஊழியர் பலி
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கியதில் ஒர்க்ஷாப் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே உள்ள லேபர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 37). இவருக்கு ராஜசுலோசனா என்ற மனைவியும், வைஷ்ணவி என்ற மகளும், ராஜ்குமார் என்ற மகனும் உள்ளனர். மாரிமுத்து முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை கடையில் வல்கனைசிங் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சுவிட்ச் போர்டில் மிதித்துள்ளார். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனே அவரை அங்கு வேலை பார்த்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே உள்ள லேபர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 37). இவருக்கு ராஜசுலோசனா என்ற மனைவியும், வைஷ்ணவி என்ற மகளும், ராஜ்குமார் என்ற மகனும் உள்ளனர். மாரிமுத்து முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை கடையில் வல்கனைசிங் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சுவிட்ச் போர்டில் மிதித்துள்ளார். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனே அவரை அங்கு வேலை பார்த்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.