செய்திகள்
வருமானவரி சோதனை

சின்னமனூரில் தனியார் பள்ளியில் வருமான வரித்துறை சோதனை

Published On 2020-03-10 10:28 GMT   |   Update On 2020-03-10 10:28 GMT
சின்னமனூர் அருகே தனியார் பள்ளியில் 2 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு வருமான வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த தகவலையடுத்து மாவட்ட வருமான வரித்துறை அலுவலரான அம்பேத்கார் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிக்குள் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிக்காமல் சோதனை நடத்தினர். பள்ளி முதல்வர், அலுவலக அறையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இரவு வரை நீடித்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அது குறித்து பராமரிக்கப்படும் ஆவணங்கள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. 2 நாட்களாக தனியார் பள்ளியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News