செய்திகள்
இலத்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
இலத்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
இலத்தூர் அருகே உள்ள இடைகாலை அடுத்த அருணகிரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் தங்கராஜ் (வயது20). இவர்கள் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டிற்கு கட்டுமான இரும்பு கம்பியை தங்கராஜ் தூக்கி சென்றபோது மின் கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பலியானார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலத்தூர் அருகே உள்ள இடைகாலை அடுத்த அருணகிரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் தங்கராஜ் (வயது20). இவர்கள் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டிற்கு கட்டுமான இரும்பு கம்பியை தங்கராஜ் தூக்கி சென்றபோது மின் கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பலியானார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.