செய்திகள்
தற்கொலை

திருக்கனூர் அருகே முதியவர் தற்கொலை

Published On 2020-03-09 17:15 GMT   |   Update On 2020-03-09 17:15 GMT
திருக்கனூர் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு காவல்காரன் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது72). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவ்வப்போது நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். 

இந்த நிலையில் நேற்று காலையும் ஜானகிராமன் நோய் கொடுமையால் துடித்தார். இதனால் மனமுடைந்த  ஜானகிராமன்  தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் ஆடு கட்ட பயன்படுத்தும் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின்பேரில்  திருக்கனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  
Tags:    

Similar News