செய்திகள்
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

Published On 2020-03-08 07:43 GMT   |   Update On 2020-03-08 07:43 GMT
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

சுமார் 1086 பேருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனிலிருந்து வந்த நபரை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி இல்லை. தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News