செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

தேனி அருகே வீடு புகுந்து நகை கொள்ளை

Published On 2020-03-02 11:15 GMT   |   Update On 2020-03-02 11:15 GMT
தேனி அருகே வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே பழனிசெட்டி பட்டி அரசு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி காயத்திரி. சம்பவத்தன்று கணவன்-மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவை உடைத்தனர்.

அதில் இருந்த தங்க மோதிரம், கம்மல் உள்பட சுமார் 4½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய காயத்திரி பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News