செய்திகள்
தற்கொலை

சூலூர் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2020-02-28 10:36 GMT   |   Update On 2020-02-28 10:36 GMT
சூலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி லட்சுமண நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் கியாஸ் கிளின் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலுசாமி புதிதாக வீடுகட்ட ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.

ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News